வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள பண்டாரவன்னியன் சிலைக்கு படி அமைக்கும் பணி வவுனியா நகரசபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன் முன்னோட்டம் தொடர்பாக ஆராய்வதற்காக நகரசபை தவிசாளர் இ.கௌதமன், உபதவிசாளர் சு.குமாரசாமி, நகரசபை உறுப்பினர் சந்திரகுலசிங்கம் மோகன், தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஆகியோர் இன்று காலை 10.45 மணியளவில் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள பண்டாரவன்னியன் சிலையடிக்கு விஐயம் செய்திருந்தனர்.
இதன்போது தேர்தல் பணிகளிற்காக மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் நகரசபை தவிசாளரிடம் இவ்விடத்திற்கு ஏன் வருகின்றீர்கள், வாகனம் இவ்விடத்தில் நிறுத்த வேண்டாமென தெரிவித்ததுடன் முரண்பட்டுள்ளார்.
இதனால் தவிசாளர் மற்றும் குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கும் இடையில் சற்று நேரம் கடுமையான முரண்பாடு ஏற்பட்டது.
தான் நகரசபை தவிசாளர் என குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு தெரிவித்தும் முறையற்ற விதத்தில் அவர் நடந்தகொண்டதாக தவிசாளர் இதன்போது தெரிவித்தார்.
இதனால் குறித்த பகுதியில் சற்றுநேரம் குழப்பநிலை ஏற்பட்டிருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM