ஈரானில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட 103 வயதுடைய முதியவரான பெண்மணி சிகிச்சைகளின் பின் குணமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
அவரின் பெயர் வெளியிடப்படாத நிலையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட அவர் ஈரானின் மத்திய நகரமான செம்னானில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கட்டார்.
பின் அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகளின் மூலம் அவர் பூரண குணமடைந்துள்ளதாக அந்நாட்டு வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுவரையில் முதியவர்களுக்கு ஏற்பட்ட கொரோனா தாக்கத்தில் இருந்து இதற்கு முன்னர் 91 வயதான முதியவர் ஒருவர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளதாக தெரிவித்த ஈரானின் செய்தி நிறுவனம் , மேலும் தற்போது 103 வயதான குறித்த நபர் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பூரண குணமடைந்துள்ளதாகவும் தெரிவித்தது.
இந்நிலையில் 2 முதியவர்கள் இதுவரையில் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பித்துக் கொண்டுள்ளனர்.
கடந்த வாரம் வைத்தியசாலையில் அனுமதிக்கட்ட முதியவருக்கு உயர் இரத்த அழுத்தம் மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சிணைகள் காணப்படதாக அவருக்கு சிகிச்சை அளித்த வைத்தியர்கள் தெரிவித்தனர்.
ஆகவே அவருக்கு வழங்கப்பட்ட முறையான சிகிச்சையின் மூலம் அவர் புரணமாக குணமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஈரானில் தற்போது வரை 17,361 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதோடு , 1134 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ள நிலையில் 5389 பேர் குணமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரவித்தமை குறிப்பிடத்தக்கது.
Image : (AFP Photo/STRINGER)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM