(நா.தனுஜா)
கொரோனா வைரஸ் நெருக்கடியில் அரசியல் இலாபம் தேடுவதாகவே ஜனாதிபதியின் உரை அமைந்துள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ நேற்று நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையில் மக்கள் தைரியத்துடனும் அச்சமின்றியும் இருக்கவேண்டும் என வலியுறுத்துவதுடன், இந்த நெருக்கடிமிக்க சூழ்நிலையில் ஓய்வின்றிப் பணியாற்றும் சுகாதாரசேவை மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு நன்றி தெரிவிப்பார் என நாம் எதிர்பார்த்தோம்.
எனினும் ஜனாதிபதி அவருடைய சகோதரருடன் இணைந்து ஆட்சியமைப்பதாகவும், அதற்கு வாக்களிக்குமாறும் கேட்டுக்கொண்டார். இச்செயற்பாடானது தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையைக் கூட அரசாங்கம் தேர்தல் பிரசாரத்திற்காகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை வெளிக்காட்டுகிறது என மடில்வின் சில்வா தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இன்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM