எதிர்வரும் பொதுத்தேர்தலில் வேட்பாளர் தெரிவு தொடர்பில் எங்கள் கட்சியிலும் கூட்டணியிலும் இடம்பெறும் கலந்துரையாடல்கள், சந்திப்புகளில், கடந்த பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருந்தவன் என்ற வகையில் நானும் கலந்து கொள்கிறேன். என்னோடு கலந்துரையாடாமல் எந்த முடிவுகளையும் தலைமைகள் எடுக்கவில்லை.
அவர்களே அத்தகைய முடிவை அறிவிக்க வேண்டும் என்ற பொது உடன்பாட்டை நாங்கள் எட்டி இருக்கிறோம். அந்த கூட்டுப் பொறுப்பை நிறைவேற்றும் வகையில் இப்போதைய தீர்மான முடிவுகள் எதனையும் என்னால் அறிவிக்க முடியாது என தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் தெரிவில் நுவரெலியா மாவட்ட பட்டியல் இறுதி செய்யப்படாத நிலையில் எழுந்திருக்கும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவர் ஊடகங்களுக்கு வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே அவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,
கட்சியிலும், கூட்டணியிலும் எடுக்கப்படும் தீர்மானங்கள் என்னிடம் கலந்துரையாடாமல் எடுக்கப்படவில்லை. எங்களது சந்திப்புகளின்போது தமிழ் முற்போக்கு கூட்டணி எந்தவகையிலும் பிளவுறாதவகையில் அதேநேரம் தலைவர்கள் இலகுவாக தீர்மானம் எடுக்கத்தக்கதாக வழிவிட்டு,கட்சி,கூட்டணி தலைமைகளுக்கு இரண்டு உறுதி மொழிகளை நான் வழங்கியுள்ளேன்.
ஒன்று,கட்சி,கூட்டணி உயர்பீடம் எடுக்கும் எந்த தீர்மானத்தையும் நான் ஏற்கத்தயாராக உள்ளேன்.இரண்டு, அத்தகைய தீர்மானம் எதுவாயினும் அதன் அடிப்படையில் கட்சி மாறமாட்டேன். அதற்கு மாறாக வேறு ஒரு கட்சியின் கூட்டணியின் வேட்பாளர் பட்டியலிலோ அல்லது தேசிய பட்டியலிலோ எனது பெயர் இடம்பெறாது. எனவே கட்சி, கூட்டணி தலைமைகள் இலகுவாக தீர்மானம் எடுக்க ஏதுவாக அமைந்த எனது உறுதி மொழிகளின் அடிப்படையில் அவர்கள் கூட்டுப்பொறுப்புடன் தமது முடிவுகளை ஊடகங்களுக்கு வெளியிடுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM