(நா.தனுஜா)
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாளை வியாழக்கிழமை அதிகாலை 4 மணியிலிருந்து வெளிநாட்டுப் பயணிகள் விமானங்கள் இலங்கை விமானநிலையத்தில் தரையிறங்குவது தடைசெய்யப்படும் என்று சிவில் விமானசேவைகள் அதிகாரசபை அறிவித்திருக்கிறது.
இதுகுறித்து அதிகாரசபையினால் இன்று புதன்கிழமை விடுக்கப்பட்டிருக்கும் அறிவித்தலில் கூறப்பட்டிருப்பதாவது:
இலங்கையின் சுகாதார அதிகாரக் கட்டமைப்புக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற அறிவுறுத்தல்களுக்கு அமைவாக, இலங்கை நேரப்படி நாளை அதிகாலை 4 மணியிலிருந்து எதிர்வரும் 25 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிவரை வெளிநாட்டுப் பயணிகள் விமானங்கள் அனைத்தும் இலங்கை விமானநிலையத்தில் தரையிறங்குவது தடைசெய்யப்படுகின்றது.
அதேவேளை இக்காலப்பகுதியில் கொழும்பிலிருந்து வெளிநாடுகளுக்குப் பயணிகள் செல்வதற்கான விமானங்கள், வேறு நாடுகளுக்குப் பயணிக்கும் வழியில் இலங்கையில் தரித்துச் செல்லும் விமானங்கள், அவசர நிலைமைகளின் காரணமாகத் தரையிறக்கப்பட வேண்டியேற்படும் விமானங்கள், பொதிகளை அல்லது சரக்குகளை ஏற்றிச்செல்லும் விமானங்கள், தொழில்நுட்பக் கோளாறுகளின் காரணமாகத் தரையிறக்க வேண்டியேற்படும் விமானங்கள், பயணிகள் இல்லாத விமானங்கள் என்பன கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் தரையிறங்குவதற்கு அனுமதிக்கப்படும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM