திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட குட்டிக்கராச்சிசந்தியில் உள்ள மருந்தகத்தில் வைத்து 2040 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக போதைபொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
நீண்டகாலமாக போதை மாத்தரைகளை விநியோகிக்கும் ஸ்தலமாக மேற்படி மருந்தகம் இயங்கி வந்த நிலையில் போதைபொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவலைப்பின்போது மருந்தகத்தில் போதை மாத்திரைகளை கைப்பற்றமுடிந்ததாக போதைபொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
போதைமாத்திரைகளை விற்பனைசெய்ய முற்பட்ட கிண்ணியா-3,குட்டிகராச்சி பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடைய நபரும் கைதுசெய்யப்பட்ட போதைபொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் நீண்டகாலமாக போதைமாத்திரை விற்பனைசெய்பவர் எனவும் கைதுசெய்யப்பட்ட நபரையும் கைப்பற்றப்பட்ட 2040 போதை மாத்திரைகளையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யும் பொருட்டு கிண்ணியா பொலிஸார் வசம் ஒப்படைத்தாக அவர்கள் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM