போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

Published By: Digital Desk 4

18 Mar, 2020 | 01:01 PM
image

திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட குட்டிக்கராச்சிசந்தியில் உள்ள மருந்தகத்தில் வைத்து 2040 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக போதைபொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

நீண்டகாலமாக போதை மாத்தரைகளை விநியோகிக்கும் ஸ்தலமாக மேற்படி மருந்தகம் இயங்கி வந்த நிலையில் போதைபொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவலைப்பின்போது மருந்தகத்தில் போதை மாத்திரைகளை கைப்பற்றமுடிந்ததாக போதைபொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

போதைமாத்திரைகளை விற்பனைசெய்ய முற்பட்ட கிண்ணியா-3,குட்டிகராச்சி பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடைய நபரும் கைதுசெய்யப்பட்ட போதைபொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் நீண்டகாலமாக போதைமாத்திரை விற்பனைசெய்பவர் எனவும் கைதுசெய்யப்பட்ட நபரையும் கைப்பற்றப்பட்ட 2040 போதை மாத்திரைகளையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யும் பொருட்டு கிண்ணியா பொலிஸார் வசம் ஒப்படைத்தாக அவர்கள் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08