கிளிநொச்சி அக்கராயன் குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெங்காதரன் குடியிருப்பில் வீடு ஒன்றுக்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது. என வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்
மிகவும் வறுமை கோட்டிற்கு உட்பட்டு கணவனால் கைவிடப்பட்டு இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்ற குடும்பத்தின் அரை நிரந்தர வீடே தீயினால் எரிந்து அழிந்துள்ளது. மின்சார கட்டணம் செலுத்தமுடியாத காரணத்தினால் வீட்டின் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டிருந்தது. எனவே மின் ஒழுக்கினால் தீ ஏற்படவில்லை எனத் தெரிவித்த அவர்.
என் குடும்பத்தின் வறுமையை கண்டு தொண்டு நிறுவனம் ஒன்றினால் தற்காலிக விடு அமைத்துக் கொடுக்கப்பட்டது இவ்வீட்டிற்கே நேற்று இரவு( 17) தீ வைக்கப்பட்டுள்ளது.
கட்டாக்காலி நாய் கடிக்கு உள்ளான தனது பிள்ளையை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றபோது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இரவு 11 மணி அளவில் தீவைப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டுக்கு வழங்கப்பட்ட மின்சார கட்டணம் செலுத்தப்படாமையினால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது நிலையில் வீட்டில் மின்சாரம் ஒழுக்கு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் அற்ற நிலையில் காணப்படுகின்றது.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை அக்கராயன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM