வடமாகாணத்தில் வாகன வருமான வரி அனுமதிப் பத்திரங்கள் பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்கும் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண மோட்டார், வாகன போக்குவரத்து திணைக்கள பணிப்பாளர் திருமதி சி.சுஜீவா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இன்று வடமாகாணத்தின் அனைத்து பிரதேச செயலங்களுக்கும் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வடமாகாண ஆளுனரின் அறிவுறுத்தலுக்கு அமைய பொதுமக்கள் பிரதேச செயலங்களில் ஒன்று கூடுவதை தவிர்க்கும் நோக்கிலும், அவர்களின் நலன் கருதியும் வாகன வருமான வரி அனுமதிப்பத்திரம் (ரக்ஸ்) வழங்கும் செயற்பாடானது தற்காலிகமாக நேற்று முதல் 31.03.2020 வரை வடமாகாணத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் இக்காலப்பகுதியில் காலாவதியான வாகன வருமான வரி அனுமதிப்பத்திரம் செலுத்துபவர்களுக்கான தண்டப்பணம் அறவிடப்படமாட்டாது என்பதுடன், இது தொடர்பில் போக்குவரத்து பொலிஸாருக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது என அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM