இவ் ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஐரோப்பிய கால்பந்து சம்பியன்ஷிப் போட்டிகளை 2021 ஆம் ஆண்டு வரை ஒத்தி வைக்க தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக ஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களில் ஒன்றான நோர்வேயின் கால்பந்து சங்கம் கூறியுள்ளது.
ஐரோப்பிய கால்பந்து சம்பியன்ஷிப் தொடரானது ஜூன் மாதம் 11 ஆம் திகதி இத்தாலியின் ரோம் நகரில் ஆரம்பமாகவிருந்தது.
இந் நிலையில் இத்தாலியில் தற்போது கொரோனா தொற்றினால் 27,980 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2,150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் ஐரோப்பா உட்பட உலகலாவிய ரீதியிலும் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இவ்வாறான நிலைமைகளை கருத்திற் கொண்டு ஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியத்தின் கூட்டம் இன்றைய தினம் இடம்பெற்றது.
இதன்போதே ஐரோப்பிய கால்பந்து சம்பியன்ஷிப் தொடரை அடுத்த ஆண்டு வரை ஒத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய கால்பந்துச் சங்கங்களின் ஒன்றியத்தின், 55 சங்கங்களில் ஒன்றான நோர்வே கால்பந்து சங்கம் (எப்.ஏ.) கூறியுள்ளது.
அதன்படி ஐரோப்பிய கால்பந்து சம்பியன்ஷிப் போட்டிகளானது 2020 ஆம் ஆண்டு ஜூன் 11 முதல் ஜூலை 11 வரை நடைபெறும் எனவும் நோர்வே கால்பந்து சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும் ஐரோப்பிய கால்பந்து சங்கம் இந்த தகவலை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM