நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்வு!

Published By: R. Kalaichelvan

17 Mar, 2020 | 08:55 PM
image

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக அடையாளம் காணப்பட்ட  2 ஆவது  நபரான சுற்றுலா வழிகாட்டியின் மனைவி உட்பட 43 பேர் இன்று புதிய கொரோனா  தொற்று நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  

அதன்படி தற்போது இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெறும்  நோயாளர்களின் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளதாக  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். 

இதனைவிட நாடளவைய ரீதியில் 17 வைத்தியசாலைகளில் 204 பேர்  கொரோனா தொற்று தொடர்பில் சந்தேகத்தில் சிகிச்சைப் பெற்று வருவதாக  சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்தது.  

அதில் 15 பேர் வெளிநாட்டவர்கள் எனவும் அந்த பிரிவு  தெரிவித்தது. 

வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்குள் வந்தோரை தனிமைப்படுத்தி தொற்று நீக்கல் மற்றும் மருத்துவ கண்கானிப்புக்கு உட்படுத்த நாடளவைய ரீதியில் இதுவரை 16 தொற்று நீக்கல் குறித்தான தனிமைப்படுத்தல் முகாம்கள்  நிறுவப்பட்டுள்ள நிலையில்,  அவற்றில் 2,258 பேர் மருத்துவ கண்கானிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக   முப்படைகளின் பதில் தலைமை அதிகாரியும் இராணுவ தளபதியுமான கொரோனா தொற்று பரவலை  தடுப்பதற்கான தேசிய நடவடிக்கை மையத்தின் தலைவர் லெப்டினன் ஜெனரால் சவேந்ர சில்வா தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55