இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக அடையாளம் காணப்பட்ட 2 ஆவது நபரான சுற்றுலா வழிகாட்டியின் மனைவி உட்பட 43 பேர் இன்று புதிய கொரோனா தொற்று நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி தற்போது இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெறும் நோயாளர்களின் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
இதனைவிட நாடளவைய ரீதியில் 17 வைத்தியசாலைகளில் 204 பேர் கொரோனா தொற்று தொடர்பில் சந்தேகத்தில் சிகிச்சைப் பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்தது.
அதில் 15 பேர் வெளிநாட்டவர்கள் எனவும் அந்த பிரிவு தெரிவித்தது.
வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்குள் வந்தோரை தனிமைப்படுத்தி தொற்று நீக்கல் மற்றும் மருத்துவ கண்கானிப்புக்கு உட்படுத்த நாடளவைய ரீதியில் இதுவரை 16 தொற்று நீக்கல் குறித்தான தனிமைப்படுத்தல் முகாம்கள் நிறுவப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 2,258 பேர் மருத்துவ கண்கானிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக முப்படைகளின் பதில் தலைமை அதிகாரியும் இராணுவ தளபதியுமான கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய நடவடிக்கை மையத்தின் தலைவர் லெப்டினன் ஜெனரால் சவேந்ர சில்வா தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM