இந்தியாவில் இருந்து 22 சுற்றுலாக் குழுக்களைச் சேர்ந்த 1,200 இலங்கை பௌத்த யாத்திரிகர்களை திரும்ப அழைத்து வருவதற்காக இலங்கை தூதரக அலுவலகத்துடன் இணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடில்லியில் உள்ள உயர் ஸ்தானிகராலயம் மற்றும் சென்னையில் உள்ள துணை உயர் ஸ்தானிகராலயம், வெளிவிவகார மற்றும் புத்தசாசன அமைச்சகங்களுடன் கலந்தாலோசித்து, தற்போது இந்தியாவில் உள்ள இலங்கை பௌத்த யாத்திரிகர்கள் விரைவாக நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை திறம்பட ஒருங்கிணைந்து செய்து வருவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொவிட் -19 வேகமாகப் பரவி வருவதால் ஏற்பட்டுள்ள பயணங்கள் மற்றும் பிற கட்டுப்பாடுகளை அடுத்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இராஜதந்திர பணிகள் சேகரித்த தகவல்களின்படி, தற்போது இந்தியாவில் 22 சுற்றுலா குழுக்களைச் சேர்ந்த சுமார் 1,200 இலங்கை பௌத்த யாத்திரிகர்கள் உள்ளனர். இம்மாதம் 09 ஆம் திகதி அன்று இலங்கை அரசாங்கம் தம்பதீவ யாத்திரைகளை நிறுத்துவதற்கு முன்பு இந்த யாத்திரிகர்கள் இந்தியா வந்திருந்தனர் ”என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வட இந்தியாவில் உள்ள பௌத்த யாத்திரை தளங்களில் உள்ள இலங்கை பௌத்த பிக்குகளுடனும், சுற்றுப்பயணக் குழுக்களுடனும் இராஜதந்திர பணிகள் நெருக்கமாக தொடர்பு கொண்டுள்ளன. சுற்றுப்பயணக் குழுக்கள் வளர்ந்து வரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு திரும்பும் பயண ஏற்பாடுகளை விரைவுபடுத்துமாறு கோரப்பட்டுள்ளன.
இந்த யாத்திரிகர்களில் பெரும்பாலானோர் வரும் சில நாட்களில் புது டில்லி மற்றும் சென்னை வழியாக திரும்ப உள்ளனர். டிக்கெட்டுகளை மறுசீரமைக்கும் நோக்கில், சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களுடனான கலந்துரையாடல்கள் உட்பட, திரும்பும் பயணிகளுக்கு பயணங்கள் வசதி செய்கின்றன, ”என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM