இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்ட 28 பேரில் ஒரு இராணுவ அதிகாரியும் உள்ளடங்குவதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள அதிகாரி வெளிநாடுகளிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும் பயணிகளை தடுப்பு முகாங்களுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக இராணுவ ஊடகப் பேச்சாளர் கூறினார்.
குறித்த நபர் தற்போது அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த அதிகாரிகள் கொரோனா தனிமைப்படுத்தலுக்காக நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள 12 முகாம்களில் சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது நாடு முழுவதும் உள்ள தடுப்பு நிலையங்களில் 15 வெளிநாட்டவர்கள் உட்பட மொத்தமாக 204 பேர் தடுத்து வைக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM