திருகோணமலையில் 180 மில்லிகிராம் ஹேரொயின் போதைப் பொருளுடன் ஐந்து சந்தேக நபர்களை நேற்றிரவு(16) கைது செய்துள்ளதாக திருகோணமலை தலைமையக போதைப் பொருள் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சீனக்குடா, சுமேதகம,கொட்பே மற்றும் நான்காம் கட்டை பகுதியைச் சேர்ந்த 21,25,22 மற்றும் 24 வயதுடைய ஐவரே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்கள் மூவரும் தலா நாற்பது மில்லிகிராம் ஹேரொயின் போதைப்பொருளை வைத்திருந்த நிலையிலும், இருவர் தலா முப்பது மில்லிகிராம் ஹேரொயின் போதைப்பொருளை தமது உடைமையில் வைத்திருந்த நிலையில் திருகோணமலை கண்டி பிரதான வீதியில் வைத்து ஐந்து சந்தேக நபர்களையும் 180 மில்லிகிராம் ஹேரொயின் போதைப்பொருளுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்கள் போதைக்கு அடிமையானவர்கள் என்றும் பொலிஸார் தெரிவிப்பதோடு, சந்தேக நபர்கள் ஐவரையும் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு,திருகோணமலை நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM