(செய்திப்பிரிவு)
கொழும்பின் பல பகுதிகளில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது ஹெரோயினுடன் 2 பெண்கள் உள்ளிட்ட 4 சந்தேகநபர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கல்கிஸ்ஸ - படோவிட்ட பகுதியில் திங்கட்கிழமை முற்பகல் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது ஹெரோயினுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 2 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கல்கிஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
மத்தேகொட பஸ் நிலையத்திற்கருகில் திங்கட்கிழமை மாலை பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது 4 கிராம் 900 மில்லிகிராம் ஹெரோயினுடன் பெண்ணொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
பன்னிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இரத்மலானை பகுதியில் திங்கட்கிழமை பிற்பகல் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்புகளின் போது ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரிடமிருந்து 2 கிராம் 650 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 40 வயதான பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
பேலியகொடை - மல்வத்த பகுதியில் நேற்று மாலை குற்றத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளின் போது 2 கிராம் 70 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பேலியகொடை பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM