கொரோ­னாவும்  தீர்க்­க­த­ரி­ச­னங்­களும்

17 Mar, 2020 | 11:31 AM
image

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் உல­கெங்­கினும் உள்ள மக்கள் மிகுந்த பதற்­றத்­துக்­குள்­ளா­கி­யி­ருப்­பதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. உலக சுகா­தார ஸ்தாப­னமும் இதன் தீவி­ரத்தை உணர்ந்து இதை தீவிர தொற்று நோயாக (Pandemic)  பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்­ளது. இவ்­வைரஸ் தொடர்பில் அதி­க­மான வதந்­தி­களே  தற்­போது தீவி­ர­மா­கி­யுள்­ளன. இந்­நி­லையில் கொரோனா என்ற இந்த வைரஸ் தொற்று குறித்து ஏற்­க­னவே கூறப்­பட்­டி­ருந்­ததா போன்ற ஆராய்ச்­சி­களும் தேடல்­களும் தற்­போது ஆரம்­பித்து விடப்­பட்­டி­ருக்­கின்­றன.

குறிப்­பாக பல நூற்­றாண்­டு­க­ளுக்கு முன்பு வாழ்ந்த தீர்க்­க­த­ரி­சி­களின்  எதிர்­வு­க்கூ­றல்­களில் இந்த கொரோனா வைரஸ் சம்­பந்­தப்­பட்­டி­ருக்­கின்­றதா என அது தொடர்­பாக ஆர்­வ­முள்­ள­வர்கள் தேடத் ­தொடங்கி­யுள்­ளனர். உலக நிகழ்­வுகள் தொடர்பில் பல எதிர்­வு­க் கூ­றல்­களை கூறி பிர­சித்தி பெற்ற ஒரு­வ­ராக விளங்­கு­பவர் பிரான்ஸ் நாட்டின்  தீர்க்­க­த­ரி­சியும்  மூலிகை மருத்­து­வரும் ஜோதி­ட­ரு­மான  நோஸ்ட்­ர­டாமஸ். இவர் 500 வருடங்­க­ளுக்கு முன்பு வாழ்ந்­தவர்.

மனிதன் நிலவில் காலடி வைத்­தமை, உல­கப்போர், ஹிரோ­சிமா –நாக­சாகி அணு­குண்டுத் தாக்­குதல், ஹிட்லர், முசோ­லினி ஆகி­யோரின் இறப்பு, அமெ­ரிக்க இரட்டை கோபு­ரத்­தாக்­குதல், இந்­தி­யாவில் பெண்ணின் ஆட்சி அவர் கொல்­லப்­ப­டுதல் (இந்­திரா காந்தி)  போன்­ற­வற்றை மிகவும் துல்­லி­ய­மாக கணித்து அதை சங்­கேத வார்த்­தை­களின் மூலம் எழுதி வைத்­தவர் நோஸ்ட்­ர­டாமஸ்.  ஆனால் அவர் கொரோனா வைரஸ் தாக்கம் பற்றி எழு­தி­யி­ருக்­கின்­றாரா என்­பது பற்றி இப்­போது தேடல் தொடங்­கி­யுள்­ளது. ஏனென்றால் சங்­கேத வார்த்­தைகள் மூலம் அவர் எழு­தி­யுள்ள கணிப்­புகள் சுமார் 6 ஆயி­ரத்தை தாண்டும். அதை இல­கு­ ப­டுத்தம் முயற்­சிகள் இன்னும் இடம்­பெற்­றுக் ­கொண்டி­ருக்­கின்­றன. இந்­நி­லையில் அமெ­ரிக்­காவைச் சேர்ந்த பெண் எழுத்­தாளர் சில்­வியா பிரவுண் 12 வரு­டங்­க­ளுக்கு முன்பு எழு­திய ஒரு நூலில் இந்த வைரஸ் தாக்கம் பற்றி குறிப்­பிட்­டுள்­ளமை தற்போது வெளி­வந்­துள்­ளது. 2020 ஆம் ஆண்டின் முற்­ப­கு­தியில் ஒரு கொடிய வைரஸ் தாக்­கத்தால் உலகம் பாதிக்­கப்­படும் என அவர் தெரி­வித்­துள்ளார்.

சில்­வியா பிர­வுணின் கணிப்பு

 2008 ஆம் ஆண்டு அவர் எழுதிய  End of Days: Predictions and Prophecies about the End of the World  (நாட்­களின் முடிவு : உலக முடிவைப் பற்­றிய கணிப்­பு­களும் தீர்க்­க­த­ரி­ச­னங்­களும்) என்ற நூலின் 312 ஆவது பக்­கத்தில் ஆங்­கி­லத்தில் இவ்­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.  

 “In around 2020 a severe pneumonia-like illness will spread throughout the globe, attacking the lungs and the bronchial tubes and resisting all known treatments. Almost more baffling than the illness itself will be the fact that it will suddenly vanish as quickly as it arrived, attack again ten years later, and then disappear completely.”  

இதன் அர்த்தம் என்­ன­வென்றால், "2020 ஆம் ஆண்டில், கடு­மை­யான நிமோ­னியா போன்ற நோய்த்  தாக்கம் உலகம் முழு­வதும் பரவி, நுரை­யீரல் மற்றும் மூச்சுக் குழாய்­களைத் தாக்கும். கண்டுபிடிக்­கப்­பட்ட எந்த மருந்­து­களும் சிகிச்­சை­களும் இதை கட்­டுப்­ப­டுத்­தாது. நோயை விடவும் மிகவும் குழப்­ப­மான விடயம் என்­ன­வெனில்  பர­விய வேகத்தில் அது திடீ­ரென மறைந்து விடும், பத்து ஆண்­டு­க­ளுக்குப் பிறகு மீண்டும் அதன் தாக்கம் இருக்கும்,  பின்னர் முற்றிலும் மறைந்­து­விடும்.”

இவ்­வாறு அவர் கூறி­யி­ருக்­கிறார். சமூக ஊட­கங்­களில் இது தற்­போது வைர­லா­கி­யுள்­ளது. ஆனால் அவர் கூறி­யுள்ள காய்ச்சல் கொரோனா இல்லை. கொரோ­னாவின் தொடர்ச்­சி­யாக வரப்­போகும் ஒரு காய்ச்சலைப்­பற்றி தான் அவர் கூறி­யுள்ளார் என மற்­று­மொரு சாரார் கருத்துக் கூறி வரு­கின்­றனர். சில்­வியா பிரவுண் 2013 ஆம் ஆண்டு தனது 77 ஆவது வயதில் காலமானார் என்­பது குறிப்­பி­டத்­தக்கது.

டீன் கூன்ட்ஸ்

இதே­வேளை மற்­று­மொரு அமெ­ரிக்க புனைகதை நாவ­லா­சி­ரி­ய­ரான டீன் கூட்ஸ் எழு­திய  the Eyes of Darkness என்ற திகில் நாவலில் இந்த கொரோனா வைரஸ் தாக்கம் பற்றி குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­கவும் கூறப்­ப­டு­கின்­றது.

இந்த நாவல் 1981 ஆம் ஆண்டு வெளி­வந்­த­தாகும்.  இந்த நாவலின் கதை சீனாவின் வுஹான் நகரில் இடம்­பெ­று­வ­தா­கவே சித்­தி­ரிக்­கப்­ப­டுகின்­றது.

கதையின் சுருக்கம்    

கிறிஸ்­டினா இவான்ஸ் என்ற பெண்ணின் மகன் டேனி ஒரு முகா­முக்கு செல்­கிறார்.  எனினும் டேனி சென்ற ஒரு மாதத்­திற்குள் அவர் இறந்து விட்­ட­தாக கிறிஸ்­டி­னா­வுக்கு தகவல் வரு­கின்­றது. இதை அவரால் நம்ப முடி­ய­வில்லை. ஒரு வரு­டத்­திற்கு பிறகு மக­னுக்கு அந்த முகாமில் என்ன நடந்­தது  என்று கண்­டு­பி­டிக்க முடிவு செய்­கிறார்.  அந்த முயற்­சியில் தன் மகன் டேனி சாக­வில்லை என்றும்  உயி­ருடன் ஒரு இரா­ணுவ முகாமில் இர­க­சி­யமாக அடைத்து வைக்­கப்­பட்­டி­ருக்­கிறான் என்­பதை தெரிந்து கொள்கிறார்.

- சிவலிங்கம் சிவகுமாரன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54