தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைகாரணமாக அனைத்து இந்துமத வழிபாட்டுத்தலங்களிலும் அமைதியான முறையில் அடியவர்கள் வழிபடலாம் எனவும் நித்திய கைங்கர்யங்களில் எந்த மாற்றமும் ஏற்படுத்த தேவை இல்லை எனவும் நைமித்திய பூஜைகளை சற்றே ஆடம்பரமில்லாது அமைதியாக செய்து கொள்ளவும் என சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் தலைவர் சிவஸ்ரீ.ஜெ.மயூரக்குருக்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இன்று உலகநாடுகளை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸானது பல மனித உயிர்களை காவுகொண்டுள்ளதுடன் மிக வேகமாகப் பரவியும் வருகின்றது. அதனைக் கட்டுப்படுத்த பல உலக நாடுகள் திணறிவருகின்றது. ஆனால் அவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றதை நாம் அனைவரும் அறிவோம்.
வைத்தியதுறையும், அரசாங்கமும் பரவாமல் இருக்க பல வழிகளை எமக்கு தெரிவித்துள்ளனர். எனவே அவற்றை செய்ய வேண்டியது அனைவரது கடமையாகும். அதனால் இந்த நோய்த்தாக்கத்தில் இருந்து நாம் அனைவரும் காக்கப்படவேண்டுமேயானால் சில முன்னேற்பாடுகளை செய்ய வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு தொடுகைகள் மற்றும் சுவாசங்கள் மூலம் பரவுவதால் பலர் ஓரிடத்தில் சேரும்போது அதனுடைய பரம்பல் பரவலடையும் எனவே அப்படியான சந்தர்ப்பங்களை அனைவரும் தவிர்த்துக்கொள்வோம்.
இது அனைவரது உயிர்சார்ந்த நடவடிக்கையாகும். அதனால் நாம் ஆலயங்களில் தற்காலிகமாக அதிகமாக கூடுவதனை தவிர்கலாம். பொது நன்மைகள் கருதி அவற்றை குறைத்துக்கொள்வதில் எந்த இடையூறுகளும் ஏற்படப்போவதில்லை.
வழமையான வழிபாடுகளுக்கும் எந்த குந்தகமும் ஏற்படப்போவதில்லை. எனவே வைத்தியர்களின் ஆலோசனைப்படி அவற்றை மேற்கொள்வதுடன் அனைத்து சுகாதாரத் தொண்டர்களுக்கும், வைத்தியர்களுக்கும் பூரண ஆதரவினை வழங்கி அவர்களின் செயற்பாடுகள் சிறப்பாக அமைய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
தேவை ஏற்படும் போது சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் அனைத்து இளைஞர்களும் உறுப்பினர்களும் களத்தில் இறங்கி வேலைசெய்யவும் தயாராக உள்ளனர். எனவே ஆலயம் சார்ந்தோர்கள் இதனை நடைமுறைப்படுத்துமாறு அன்பாக கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM