(எம்.ஆர்.எம்.வஸீம்)
நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இருப்பதால் வேட்புமனு தாக்கல் செய்ய வரும் கட்சிகளில் அதிகாரமுள்ள இரண்டுபேர் மாத்திரம் தேர்தல்கள் செயலகத்துக்கு வருகை தருமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் சுயேட்சைக்குழுக்களிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றது.
இதுதொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 17,18 மற்றும் 19ஆம் திகதிகளில் வேட்புமனு தாக்கல்செய்ய வரும் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் அதுதொடர்பில் அதிகாரமுள்ள ஒருவர் வருகை தருமாறு கேட்டுக்கொள்கின்றேன். வேட்புமனுவை கையளிக்க அதிகாரமுள்ள கட்சிகளின் செயலாளர், அதிகாரமுள்ள பிரதிநிதி அல்லது சுயேட்சை குழுக்களின் தலைவர் மற்றும் வேட்பாளர் பட்டியலில் இரண்டாவதாக பெயர் இடம்பெற்றிருப்பவர் வேட்புமனுத்தாக்கல் செய்ய செயலகத்துக்குள் வரமுடியும்.
அத்துடன் தேவை இருப்பின் உதவியாளர் ஒருவரை செயலகத்துக்குள் அழைத்துவரமுடியும். வேட்புமனு தாக்கல் செய்ய அழைத்துவருவதற்கு சட்டரீதியாக எண்ணிக்கை இருக்கின்றபோதும், வேட்புமனு தாக்கல் செய்பவரும் மற்றுமொருவரும் செயலகத்துக்குள் வருவதனை வரவேற்கின்றேன்.
அத்துடன் வேட்புமனு தாக்கல் செய்தபின்னர் ஊர்வலம் செல்வது சட்டவிரோத கூட்டங்கள் நடத்துவது தேர்தல் சட்டத்தின் பிரகாரம் தடைசெய்யப்பட்டிருக்கின்றது என்றாலும் நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலிலிருந்து பாதுகாப்பு பெறும் நோக்கில், வேட்புமனு தாக்கல் செய்யும் வேளையில், கட்சி ஆதரவாளர்களை அழைத்து வருதல் தேர்தல்கள் செயலகத்துக்கு முன்னால் ஒன்றுகூடுதல் மற்றும் ஊர்வலம் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும் இந்த தினங்களில் மாத்திரம் இல்லாமல் முடியுமானால் எதிர்வரும் 10 நாட்களுக்காவது, அரசியல் கூட்டங்கள் நடத்துதல், மக்களை ஒன்றுதிரட்டி மக்கள் பாரிய கூட்டங்களை நடத்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறு அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களை கேட்டுக்கொள்கின்றோம் .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM