(எம்.ஆர்.எம்.வஸீம்)
மக்களின் உயிர் பாதுகாப்பைவிட அரசாங்கம் எப்படியாவது தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளும் நோக்கிலே செயற்பட்டு வருகின்றது. பொறுப்பு வாய்ந்த எதிர்க்கட்சி என்றவகையில் தேர்தலுக்கு செலவாகும் அனைத்து செலவினங்களையும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு செலவிட தயாராக இருக்கின்றோம்.
அத்துடன் நாட்டின் தற்போதைய நிலையில் தேர்தலொன்றுக்குச் செல்வது எப்படி சாத்தியமாகும் என்பதை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
கொரோனா வைரஸ் சீனாவில் தாக்கம் செலுத்தும்போதே அது தொடர்பில் கவனம்செலுத்தி, எமது நாட்டுக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என 5வாரங்களுக்கு முன்னரே பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பி, அரசாங்கத்துக்கு அறிவுறுத்தினேன். ஆனால் அது தொடர்பில் அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை. எமது கோரிக்கையை அரசாங்கம் அன்று செயற்படுத்தி இருந்தால் நாட்டுக்கு இந்தளவு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்காது.
அத்துடன் வெளிநாட்டில் இருந்து வரும் எமது பிரஜைகளை தொற்றுநோய் இருக்கிறதா என பரீட்சிக்கும் தடுப்பு மையங்களுக்கு அனுப்பி குறிப்பிட்ட நாட்களுக்கு அவர்களை அவதானிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது. ஆனால் சீன மக்களை அவ்வாறான பரிசோதனைகளுக்கு உட்படுத்துவதில்லை. இது பாரிய பிரச்சினையாகும். சீன பிரஜைகளுக்கு நோய் தொற்று இல்லை என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கின்றது. அரசியல் தேவைகாக இவ்வாறு செயற்படக்கூடாது.
அத்துடன் சர்வதேச மட்டத்தில் கொரோனா வைரஸ் வியாபித்துவரும் நிலையிலே பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. நாங்கள் தேர்தலுக்கு செல்ல எந்த அச்சமும் இல்லை. என்றாலும் இரண்டு வாரங்களுக்கு தேர்தல் பிரசாரங்கள், 5பேருக்கு அதிகமானவர்கள் ஒன்றுகூடல் என்பவற்றுக்கு அரசாங்கம் தடைகளை ஏற்படுத்தி இருக்கின்றது. மக்கள் ஒன்றுகூடல்களை தடுத்திருப்பதை நாங்கள் வரவேற்கின்றோம். அதனால் நாங்கள் எமது பிரசார நடவைக்கைகளை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளோம். இவ்வாறான நிலையில் எம்மால் முடிந்த ஒத்துழைப்பை நிபந்தனையின்றி அரசாங்கத்துக்கு வழங்க நாங்கள் தயாராக இருக்கின்றோம். அதேபோன்று தேர்தலுக்கு செலவாகும் நிதியை வைரஸ் பாதிப்புக்கு ஆளாகுவோருக்கு செலவிடவும் தயாராக இருக்கின்றோம்.
என்றாலும் அரசாங்கம் நாட்டின் நிலைமையை கருத்திற்கொண்டு பிரசார நடவடிக்கைகளை இரண்டுவாரங்களுக்கு தடைசெய்திருக்கின்ற போதும் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதி திகதி எதிர்வரும் 19 என அறிவித்திருக்கின்றது. வேட்புமனு தாக்கல்செய்ய 5 பேர் கொண்டகுழு, வரப்போவதில்லை. அதேபோன்று மக்களை சந்தித்து பிரசாரம் செய்யாமல் தேர்தல் ஒன்றுக்கு முகம்கொடுப்பது சாத்தியமில்லை. இவ்வாறான நிலையில் அரசாங்கம் எப்படியாவது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளும் முயற்சியையே மேற்கொண்டு வருகின்றது.
மேலும் கொரோனா வைரஸ் தாக்கத்தில் நியூசிலாந்தில் 6பேர் பாதிக்கப்பட்டதுடன் அந்த நாடு அவசரகால நிலைமையை பிரகடனம் செய்திருக்கின்றது. ஆனால் எமது நாட்டில் இதுவரை 10பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டும் அரசாங்கம் எந்த தீர்மானத்தையும் எடுக்காமல் இருக்கின்றது. வைரஸை கட்டுப்படுத்த அரசாங்கத்திடம் முறையான வேலைத்திட்டம் இல்லை. இந்த நிலைமை தீவிரமடைந்தால் அதற்கு முகம்கொடுக்க தேவையான முகக்கவசங்கள், மருந்துவகைகள் போதுமானளவு வைப்பில் இல்லை. அதனால்தான் அனைத்து தரப்பினரும் கலந்துரையாடி முறையான வேலைத்திட்டத்தை மேற்கொள்ளவே பாராளுமன்றத்தை கூட்டுமாறு கோரியிருந்தேன். ஆனால் இதற்கு முறையான பதிலளிக்காமல் வைரஸை பயன்படுத்தி சஜித் பிரேமதாச அரசியல் செய்வதாக அரசாங்க தரப்பினர் விமர்சிக்கின்றனர்.
நாட்டு மக்களின் உயிரை பணயம்வைத்து அரசியல் இலாபம்தேட எமக்கு எந்த தேவையும் இல்லை. அரசாங்கத்தின் தற்போதைய இயலாமையை பயன்டுத்திக்கொண்டு தேர்தலுக்கு செல்வதால் எதிர்க்கட்சிக்கு அதன் நன்மை அதிகம். என்றாலும் நாங்கள் அவ்வாறு சிந்திக்கவில்லை.
மேலும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சர்வதேச நாடுகள் பலவற்றில் தேர்தல்களை பிற்படுத்தி இருக்கின்றன. இங்கிலாந்தில் இடம்பெற இருந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் மே மாதம்வரை பிற்போடப்பட்டுள்ளது. அதேபோன்று ஜோர்ஜியாவில் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னேற்பாடாக இடம்பெறும் ஆரம்ப தேர்தல் நடவடிக்கைகளை மார்ச் 3ஆம் திகதியில் இருந்து ஏப்ரல் 19 வரை பிற்போட்டு இருக்கின்றனர். அதனால் மூன்றில் இரண்டைவிட மக்களின் உயிர் முக்கியம் என்பதை உணர்ந்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM