மஸ்கெலியா பிரிவுக்குட்பட்ட பிரவுன்ஸ்விக் தோட்ட தேயிலை தொழிற்சாலையிலிருந்து தேயிலையைத் திருடுவதற்கு முயன்ற குற்றச்சாட்டில் கடந்த சனிக்கிழமையன்று கைது செய்யப்பட்ட ஐவரையும் விளக்கமறியளில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
மஸ்கெலியா பிரிவுக்குட்பட்ட பிரவுன்ஸ்விக் தோட்ட தேயிலை தொழிற்சாலையிலிருந்து தேயிலையைத் திருடுவதற்கு முயன்ற குற்றச்சாட்டில் கடந்த சனிக்கிழமையன்று மூவர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் படி மேலும் இருவரையும் கைது செய்ததாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.பண்டார தெரிவித்தார்.
மேலும்,இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்ததேகநபர்கள் ஐவரும் ரூபாய் 95000 பெறுமதியான 237 கிலோ கிராம் தேயிலையைக் களவாட முயன்றுள்ளனர்.
இதன்போது குறித்த சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கு வழங்கப்பட்ட தகவலைத் தொடர்ந்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று சந்தேக நபர்களைக் கைது செய்ததாகவும் அந்த சந்தேக நபர்களை நேற்று 15ஆம் திகதி ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது அவர்களை எதிர்வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM