மஸ்கெலியாவில் தேயிலை திருட முற்பட்டவர்களுக்கு  விளக்கமறியல்

Published By: Digital Desk 4

16 Mar, 2020 | 02:22 PM
image

மஸ்கெலியா பிரிவுக்குட்பட்ட பிரவுன்ஸ்விக் தோட்ட தேயிலை தொழிற்சாலையிலிருந்து தேயிலையைத் திருடுவதற்கு முயன்ற குற்றச்சாட்டில் கடந்த சனிக்கிழமையன்று கைது செய்யப்பட்ட ஐவரையும் விளக்கமறியளில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

மஸ்கெலியா பிரிவுக்குட்பட்ட பிரவுன்ஸ்விக் தோட்ட தேயிலை தொழிற்சாலையிலிருந்து தேயிலையைத் திருடுவதற்கு முயன்ற குற்றச்சாட்டில் கடந்த சனிக்கிழமையன்று மூவர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் படி மேலும் இருவரையும் கைது செய்ததாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.பண்டார தெரிவித்தார்.

மேலும்,இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்ததேகநபர்கள் ஐவரும் ரூபாய் 95000 பெறுமதியான 237 கிலோ கிராம் தேயிலையைக் களவாட முயன்றுள்ளனர்.

இதன்போது குறித்த சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கு வழங்கப்பட்ட தகவலைத் தொடர்ந்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று சந்தேக நபர்களைக் கைது செய்ததாகவும் அந்த சந்தேக நபர்களை  நேற்று 15ஆம் திகதி ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது அவர்களை எதிர்வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55