கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க அவசரகால நிதியாக இந்தியா சார்பில் 10 மில்லியன் டொலர் வழங்கப்படுமென சார்க் நாடுகளின் தலைவர்களுடன் இடம்பெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சார்க் நாடுகளின் தலைவர்களின் கூட்டம் இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றது.
இதன் போது இலங்கை ஜனாதிபதி உட்பட அனைத்து சார்க் நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.
இதன்போது இந்திய பிரதமர் மோடி இந்திய தலைநகர் புதுடெல்லிருந்து காணொளி மூலமாக ஆலோசனை நடத்திய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் தெரிவித்ததாவது,
இந்த சிறப்பு கூட்டத்தொடரில் பங்கேற்க இணைந்துள்ள உங்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்த நிலையில் நம்முடன் இணைந்துள்ள நண்பர், நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒளிக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் விரைவில் நலம்பெற வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்.
இந்த சவாலை எதிர்கொள்ள நாம் தயாராகும் நிலையில், வைரஸ் பரவலை எதிர்கொள்ள இதுவரை இந்தியா மேற்கொண்ட அனுபவம் பற்றி விரிவாக பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். தயாராகுங்கள். ஆனால் அச்சம் கொள்ளாதீர்கள் என்பது எங்களுடைய வழிகாட்டி மந்திரம் ஆகும்.
எங்களது மக்களுக்கு இடையேயான பிணைப்பு என்பது மிக பழமையானது. எங்களுடைய சமூகங்கள் ஆழ்ந்த பிணைப்பு கொண்டவை. ஆகையால், நாம் அனைவரும் ஒன்றாக தயாராக வேண்டும். ஒன்றிணைந்து செயற்பட்டு ஒன்றாக வெற்றி பெற வேண்டும்.
மேலும், கொரோனாவை தடுக்க அவசரகால நிதியாக இந்தியா சார்பில் 10 மில்லியன் டொலர் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM