கொரோனா வைரஸால் இஸ்ரேல் பிரதமரின் குற்றவியல் வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு!

Published By: Vishnu

15 Mar, 2020 | 03:00 PM
image

செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவிருந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றவியல் வழக்கு விசாரணைகள் கொரோனா வைரஸ் அவசர காலநிலை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையானது 100 ஐ எட்டியுள்ள நிலையில், நீதியமைச்சர் நீதிமன்ற துறையில் அவசர காலநிலையை பிரகடனப் படுத்தியுள்ளார்.

அதற்கு அமைவாகவே தற்போது பெஞ்சமின் நெதன்யாகுவின் வழக்கு விசாரணைகள் மே மாதம் 24 ஆம் திகதிக்கு ஒத்து வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் நீதியமைச்சு இன்றைய தினம் அறிவித்துள்ளது.

மூன்று தனித்தனி ஊழல் வழக்குகளின் படி இலஞ்சம், மோசடி மற்றும் நம்பிக்கையை மீறியமைக்காவே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக அந் நாட்டு சட்டமா அதிபர் ஜெனரல் அவிச்சாய் மண்டெல்பிட் கடந்த ஜனவரி மாத இறுதியில் ஜெருசலேம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Photo Credit : CNN

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47