அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டி வெள்ளியன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் மூடிய அரங்கில் நடைபெற்றது. இப்போட்டியைக் காண பார்வையாளர்கள் எவருக்கும் அனுமதி அளிக்கவில்லை. ஆனால் ஒருவருக்கு மாத்திரம் ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆம். அவர் 'யப்பா' (yabba) என அறியப்பட்டவராவார். இவரைத் தவிர பார்வையாளர் அரங்கில் வேறெவரும் இருக்கவில்லை.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ரசிகராக விளங்கிய இவரின் இயற்பெயர் ஸ்டீபன் ஹரோல்ட் கேஸ்கொயிங் ஆகும். 1920 கள் முதல் 1930 கள் வரையான காலப்பகுதிகளில் இவரின் நடவடிக்கைகள் பலரையும் கவர்ந்திருந்தன.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகரான இவர், அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி சிட்னி மைதானத்தில் விளையாடும்போதெல்லாம் சிட்னி கிரிக்கெட் மைதானத்தின் 'ஸ்கோர் போர்ட்' பலகைக்கு எதிர்த்திசையில் அமைந்துள்ள பார்வையாளர் பகுதியின் உயரமான இடத்திலிருந்து போட்டியை கண்டுகளிக்கும் வழக்கத்தைக் கொண்டிருப்பார். இவர் உற்சாக கோஷம் அவுஸ்திரேலிய வீரர்களுக்கு புது தெம்பை அளிக்கும் விதமாக அமைந்ததுடன், ரசிகர்கள் பலரையும் கவர்ந்திழுக்கும் வண்ணமாக இருந்தது.
இவரின் மறைவுக்கு பின்னர் அவர் வழமையாக இருக்கும் இடத்தை அவருக்காக ஒதுக்கப்பட்டதுடன், 2008 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் திகதியன்று அவர் அமர்ந்துகொண்டு கோஷமிடும் விதமான அவரின் வெண்கல சிலையொன்றை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை வடிவமைத்தது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முடிய அரங்குக்குள் பார்வையாளர்கள் எவரும் அனுமதிக்கப்படாவிடினும், யப்பா போட்டியை தனியொருவராக கண்டுகளித்திருந்ததாக அனைவரும் நினைவு கூர்ந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM