களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் காலவதியான உணவுப் பொருட்களை காட்சிபடுத்தி வைத்திருந்தமை மற்றும் சுகாதாரமற்ற முறையில் உணவுப்பொருட்களை சேமித்து வைத்திருந்தமை தொடர்பாக இருவருக்கு எதிராக வழக்கு தொடராப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளதாக பிரதேசததிற்கு பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
களுவாஞ்சிகுடி பிரதேச நகர்புறத்தில் உள்ள முக்கிய உணவங்கள் மற்றும் பொதுச் சந்தை மீன் விற்பனை பகுதி போன்ற இடங்களில் திடிர்பரிசோதனை நடவiடிக்கை ஒன்றினை மேற்படி பிரதேசத்திற்கு பொறுப்பான பொதுச்சுகாதார பரிசோதகர் தலமையிலான பொதுச் சுகாதார பரிசோதகர் குழுவினர் முன்னெடுத்திருந்தனர்.
இச் சோதனை நடவடிக்கையின் போது உணவங்களில் இருந்து காலவதியான உணவுப்பண்டங்கள், முறையற்ற வகையில் சேமித்து வைத்திருந்த பெருந்தொகையான வெங்காயம், கொத்துறொட்டிக்கு பாவிக்கும் றொட்டி மற்றும் மீன் சந்தையில் சுகாதரமற்ற முறையில் விற்பனை செய்த மீன்கள் ஒரு தொகுதி என்பன இதன் போது கைப்பற்றப்பட்டிருந்தன.
கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும் உரிமையாளர்களின் அனுமதியுடன் அழிக்கப்பட்டது. ஏதிர்வரும் காலங்களில் மேற்படி சம்பவங்கள் நடைபெறாதிருப்பதற்காக சம்பந்தப்பட்ட நபர்களுக்கு சுகாதார நடைமுறை தொடர்பான விளக்கங்களை மேற்படி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM