இலங்கையில் பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொழும்பில் கடந்த வியாழக்கிழமை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 2 ஆவது நோயாளியின் வீட்டை கொழும்பு மாநகர சபை பொது மக்கள் சுகாதார திணைக்கள அதிகாரிகளால் கிருமி தொற்று அகற்றல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதுவரை இலங்கையில் 10 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருப்பது உறுதியாகியுள்ள நிலையில், இத்தொற்று மேலும் பரவாதிருக்க அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளமையும் குறிப்பிடதக்கது.
மேலும் பலர் கொரோனா தொற்றுக்குள்ளாகி நாட்டில் இருக்கக் கூடும் என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இந்நிலைமையை கருத்தில் கொண்டு பாரியளவில் பொது மக்கள் கூடும் இடங்கள் மற்றும் திரையரங்குகளை மூடுவதற்கு அரசாங்கத்தால் நேற்று (14.03.2020) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை 103 பேர் வரையில் கொரோனா வைரஸால் பீடிக்கப்பட்டுள்ளதாக கருதப்படும் நிலையில் அவர்கள் நாடு முழுவதுமுள்ள 14 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM