விளக்கமறியல் கைதி யாழ்.வைத்தியசாலையிலிருந்து தப்பியோட்டம்

Published By: Daya

14 Mar, 2020 | 11:09 AM
image

சித்திரவதைக்குட்படுத்தப்பட்டதாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தேகநபர் யாழ் போதனா வைத்தியசாலையி லிருந்து தப்பியோடியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், நேற்றுமுன்தினம் தாக்குதல் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டார். 

அத்தோடு, குறித்த சந்தேகநபரை பொலிஸார் கைது செய்து சித்திரவதைக்குட்படுத்தியதாக தெரிவித்து மனித உரிமை ஆணைக்குழுவினால் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் வைத்தியசாலைக்குச் சென்ற நீதவான் இரண்டு குற்றங்களிற்குப் பிணையினையும் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டிற்கு 14 நாள் விளக்கமறியலும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் நேற்றைத் தினம் சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தரிடம் இயற்கை கடன் கழிப்பதற்குச் செல்ல வேண்டும் எனத் தெரிவித்ததையடுத்து சிறைச்சாலை உத்தியோகஸ்தரால் விலங்கு அகற்றப்பட்ட நிலையில் நேற்று மாலை நான்கு மணியளவில் தப்பியோடியுள்ளார்.

 குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22