முல்லைத்தீவு செம்மலை பகுதியில் ஐஸ் போதைப்பொருளை வீட்டில் மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரை விசேட அதிரடி படையினர் கைது செய்துள்ளனர்.
இன்று காலை முல்லைத்தீவு விசேட அதிரடி படையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் செம்மலை பகுதியிலுள்ள வீடொன்றில் ஐஸ் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.
செம்மலை பகுதியைச் சேர்ந்த 42 வயதான நபரை இவ்வாறு விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டுள்ள 910 கிராம் ஐஸ் போதைப்பொருளைக் கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில் பொலிஸ் விசாரணை மூலம் மேலும் தெரியவருவதாவது, மீன்பிடி படகுகள் மூலம் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டிருந்ததாகவும், அவர் போதைப்பொருள் வியாபாரி எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM