(எம்.மனோசித்ரா)
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களை அழித்துவிட முடியும் என்று கருதிவிட கூடாது. தாய்நாட்டில் இன்றும் காணப்படுகின்ற நீதி, நேர்மை, மோசடிகளுக்கு எதிரான மக்களின் கனவுகளை நனவாக்கும் இலக்கை நோக்கி பயணிப்பதற்கு சு.க.வை மீளமைக்க சிறந்த தலைமைத்துவம் உருவாகும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு ' பூந்தோட்டத்திலுள்ள அனைத்து ரோஜாக்களையும் அழிக்க முடிந்தாலும் கூட மீண்டும் தளிர் விடுகின்ற வசந்த காலத்தை தடுக்க இயலாது ' என்று ரஷ்யாவின் சிரேஷ்ட எழுத்தாளர்களுள் ஒருவர் கூறியுள்ளதை நான் மிகவும் ஆழமாக நம்புகின்றேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ள 13 பக்கங்களைக் கொண்ட கடிதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்த கடிதத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிதைவு, அத்தனகல தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கியமை, 2015 தேசிய அரசாங்கம், சுதந்திர கட்சியை அழிப்பதற்கான சதித்திட்டங்கள், 2019 ஜனாதிபதித் தேர்தல் தீர்மானம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் சந்திரிகா குமாரதுங்க காரசாரமாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM