மன்னாரில் வெடி பொருட்கள் புதைத்து வைத்துள்ளதாகச் சந்தேகத்தின் பேரில் நீதவான் முன்னிலையில் இரண்டாவது நாளாகவும் அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டது.
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,பேசாலை பிரதேசத்திற்குட்பட்ட வியாயடிப் பண்ணை காட்டுப் பகுதியில் ஆயுதங்கள் உள்ளிட்ட சந்தேகத்திற்கு இடமான வகையில் பொருட்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்துக் குறித்த பகுதியில் இரண்டாவது நாளாகவும் இன்று வெள்ளிக்கிழமை காலை அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
எனினும் குறித்த அகழ்வுப்பணிகள் இடம்பெற்றுவருகின்ற போதும் தற்போது வரை எவ்வித ஆயுதங்களும் மீட்கப்படவில்லை.
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,பேசாலை பிரதேசத்திற்குட்பட்ட வியாயடிப் பண்ணை காட்டுப் பகுதியில் ஆயுதங்கள் உள்ளிட்ட சந்தேகத்திற்கு இடமான வகையில் பொருட்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக மன்னார் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று நேற்று வியாழக்கிழமை மாலை குறித்த பகுதியில் அகழ்வு நடவடிக்கை இடம் பெற்றது.
இந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை(13) காலை 2 ஆவது நாளாகவும் மன்னார் நீதவான் முன்னிலையில் குறித்த பகுதியில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
எனினும் எவ்வித ஆயுதங்களும் மீட்கப்படவில்லை.தொடர்ந்தும் அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM