உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - கைதான 12 பேருக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு

Published By: Daya

13 Mar, 2020 | 04:09 PM
image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதானோரில்  12 பேருக்கு இம் மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டது.

குறித்த வழக்கு  கல்முனை நீதிமன்ற  நீதிவான்  ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு இரு வேறு  சந்தர்ப்பங்களில் வெள்ளிக்கிழமை (13) எடுத்துக்கொள்ளப்பட்டது.

மேற்படி  விசாரணைக்காக வந்த சந்தேகநபர்கள் அனைவரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் பாதுகாப்பு தரப்பினர்களால் அவசரக்கால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுக் கடந்த காலங்களில் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலிருந்து கைதாகிப்  பல  மாதங்களிற்கு மேலான விளக்கமறியலில்  வைக்கப்பட்டிருந்தனர்.

கைதானோரில் இருவர் பாதுகாப்பு தரப்பினரின் முகாம் ஒன்றில்  தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது . 

எனினும்  இவர்களின் தடுப்புக்காவல் நிறைவடைவதைச் சுட்டிக்காட்டிய போதிலும் சட்டமா அதிபரின் பணிப்புரை கிடைக்கப்பெறாமையும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை இன்னும் நிறைவடையவில்லை என மன்றில் ஆஜரான பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

 மேலும் குறித்த சந்தேகநபர்கள் தொடர்பான பிணை கோரிக்கை குறித்து சட்டமா அதிபர் திணைக் களத்தின் கவனத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அதேவேளை இன்று பொலிஸாரின் ஆட்சேபனை காரணமாக அனைத்து சந்தேகநபர்களதும் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுக் குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் மாதம் 27ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைதான சந்தேகநபர்கள் அனைவரும் காத்தான்குடி,  கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந் துறை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

கடந்த சில வாரம் குறித்த தாக்குதல் சம்பவத்துடன் கைதாகி விளக்கமறியலில்  வைக்கப்பட்ட மேற் குறித்த இடங்களைச் சேர்ந்த  அனைவரும்  சட்டமா அதிபரின் பணிப்புரைக்கமைய வெவ்வேறு சிறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்த பின்னர் மீண்டும் இன்று விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33