(இராஜதுரை ஹஷான்)
ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் சின்னமான தொலைபேசியை மக்கள் மயப்படுத்தும் நிகழ்வுடன் சஜித் பிரேமதாசவிற்கான ஆதரவினை உத்தியோகப்பூர்வமாக குமார வெல்கம அறிவித்தார்.
நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் நவ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் குமாரவெல்கம ஐக்கிய மக்கள் சக்தி கட்சியுடன் இணைந்து கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் உத்தியோகபூர்வமாக கைச்சாத்திட்டார்.
அத்துடன், இந்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் ரிஷாத் பதியுதீன் , ஜாதிக ஹல உறுமய வின் தலைவர் சம்பிக்க ரணவக்க, தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் பழனி திகாம்பரம் உட்பட ஐக்கிய தேசிய கட்சின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுமான ,ஜே.சி.அலவத்துவல , சுஜீவ சேனசிங்க , திஸ்ஸ அத்தனாயக்க,ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
அதேவேளை எம்.எச்.எம்.பௌசியும் நிகழ்வில் கலந்துக்கொண்டிருந்தார். ஐக்கிய தேசிய கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் தொகுதி அமைப்பானர்கள் கட்சி ஆதரவாளர்கள் என பல முக்கியஸ்தர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM