இந்தியாவில் கைதான இலங்கை மீனவர்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை

Published By: Daya

13 Mar, 2020 | 01:43 PM
image

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாகக் கைது செய்யப்பட்ட 15 இலங்கை மீனவர்களை, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இலங்கைக்கே திருப்பி அனுப்ப இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்திய கடலோர பாதுகாப்பு படையின் சுற்றிவளைப்பில் கப்பல் வைபவ், கன்னியாகுமரி கடல் பகுதியில் ரோந்து சென்றது. அப்போது,  இலங்கையைச் சேர்ந்த மூன்று படகுகள் அத்துமீறி இந்தியக் கடல் பகுதிக்குள் நுழைந்து மீன்பிடித்துக் கொண்டிருந்ததை ரோந்து படையினர் கண்டனர்.

இதையடுத்து, அங்கு விரைந்து சென்ற கடலோர பாதுகாப்பு படையினர் ‘சுகந்தி’, ‘செரல்’, ‘நெட்மி’ எனும் பெயர் கொண்ட 3 படகுகளை மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து, அந்த படகுகளிலிருந்த 15 மீனவர்களை கைது செய்தனர்.

இதையடுத்து,  படகுகளையும் மீனவர்களையும் தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு அழைத்துவர அனுமதி கேட்டனர். ஆனால், ‘கொரோனா வைரஸ் எச்சரிக்கை காரணமாக, வெளிநாட்டினர் மற்றும் படகுகளைத் துறைமுகத்துக்குள் அனுமதிக்க முடியாது’ என, துறைமுக நிர்வாகம் மறுத்துவிட்டது.

இதனால், மீனவர்கள் 15 பேரும் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 10 நாட்டிகல் மைல் தொலைவில் படகுகளுடன் நிறுத்தப்பட்டனர். அவர்களுக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா எனத் துறைமுக வைத்திய குழுவினர் சோதனை செய்தனர்.

தற்போதுள்ள சூழலில், குறித்த நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதில் சிக்கல் உள்ளன. எனவே, 15 மீனவர்களையும் இலங்கைக்கே திருப்பி அனுப்ப இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து இலங்கை அரசாங்கத்துக்கு தகவல் தெரிவித்து, சர்வதேச கடல் எல்லையில் 15 மீனவர்களை ஒப்படைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17