(எம்.ஆர்.எம்.வஸீம்)
சிறிலங்கா சுதந்திர கட்சி 22 தேர்தல் மாவட்டங்களிலும் மொட்டுச்சின்னத்தில் மாத்திரமே போட்டவுள்ளதாக தீர்மானித்துள்ளதென சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி மூன்று ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டிருக்கின்றது. பொதுஜன பெரமுன, சிறிலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன மற்றும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோருடன் செய்துகொண்டிருக்கும் ஒப்பந்தத்தின் பிரகாரம் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூட்டணியாக தேர்தலுக்கு செல்வோம். நாளைய தினத்துக்குள் நாங்கள் வேட்புமனுவில் கைச்சாத்திடுவோம்.
அத்துடன் சிறிலங்கா சுதந்திரக் கட்சி 22 தேர்தல் மாவட்டங்களிலும் மொட்டுச்சின்னத்தில் மாத்திரமே போட்டியிடுவதாக தீர்மானித்திருக்கின்றது.
ஆனால் மொட்டுச்சின்னம் அல்லாத வேறு சின்னத்தில் யாராவது போட்டியிடுவதாக இருந்தால் அவர்கள் சுயேச்சையாக போட்டியிடலாம். அதில் எந்த பிரச்சினையும் இல்லை. கட்சியின் தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை.
அத்துடன் எமது கூட்டணிக்குள்ளும் ஒருசிலர் எமது ஐக்கியத்தை குழப்பும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். தேர்தலில் வெற்றிபெற முடியாதவர்கள், விருப்பு வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கிலே இவ்வாறான விமர்சனங்களை முன்வைக்கின்றனர். இவ்வாறானவர்களின் கருத்துக்களை நாங்கள் பொருட்படுத்தமாட்டோம் என்றும் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM