கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் போட்டிகளை மூடிய மைதானத்திற்குள் நடத்துவது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை ஆராய்ந்து வருகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் அதிகாரியொருவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகளை மூடிய மைதானத்தி;ற்குள் நடத்துவது குறித்து சிந்தித்து வருகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசாங்கம் அறிவித்துள்ள கடும் நடவடிக்கைகள் காரணமாக ஐபிஎல் தொடரில் ஏப்பிரல் 15 ம் திகதி வரை வெளிநாட்டு வீரர்கள் விளையாடுவதற்கான வாய்ப்பு இல்லாத நிலை ஏற்படலாம் என இந்திய கிரிக்கெட் கட்டு;ப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது.
ஐபிஎல்லில் விளையாடும் வீரர்கள் வர்த்தக விசா பிரிவிற்குள் அடங்குகின்றனர் என தெரிவித்துள்ள பிசிசிஐ அதிகாரியொருவர் மத்திய அரசாங்கத்தின் உத்தரவின் காரணமாக வெளிநாட்டு வீரர்கள் இந்தியா வரமுடியாத நிலையேற்படலாம் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்தியாவின் சுகாதார அமைச்சு தேசிய விளையாட்டு அமைப்புகள் அனைத்தையும் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டு;ள்ளது.
கொரோனா வைரசினை கருத்தில் கொண்டு பெருமளவு இரசிகர்கள் கூடுவதற்கான சந்தர்ப்பங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு இந்தியாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை கொரோன வைரஸ் அச்சம் காரணமாக இம்முறை ஐபிஎல் போட்டிகள்; பிற்போடப்படலாம் அல்லது ரசிகர்கள் தொலைக்காட்சிகளில் மாத்திரம் பார்ப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்படலாம் என மகராஸ்டிரா அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மகராஸ்டிராவின் சுகாதார அமைச்சர் ராஜேஸ் தோபே இதனை தெரிவித்துள்ளார்.
மும்பாயில் இருவர் கொரோனாவைரசினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
மாநில அரசாங்கம் போட்டிகளை இரத்துசெய்யலாம் அல்லது தொலைக்காட்சிகளில் மாத்திரம் ரசிகர்கள் பார்ப்பதற்கான வாய்ப்பை வழங்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல்போட்டிகளை ரசிகர்கள் பார்ப்பதற்கான டிக்கெட்களை விற்கப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாநில அமைச்சரவை இது குறித்து ஆராய்ந்துள்ளது நாங்கள் இரு விதமான முடிவுகளிற்கு வந்துள்ளோம், ஒன்று போட்டிகளை ஒத்திவைப்பது அல்லது மைதானத்தில் பார்ப்பதற்கு கட்டணம் அறவிடாமல் போட்டிகளை நடத்துவது என்பதே அந்த இரண்டு முடிவுகள் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மைதானத்திற்கு பெருமளவானவர்கள் போட்டிகளை பார்ப்பதை வருவதை தடுப்பதற்காக போட்டிகளை தொலைக்காட்சியில் ஓளிபரப்பு செய்வோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM