பனையூரிலுள்ள விஜய்யின் வீட்டில் இன்று வியாழக்கிழமை வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
ஏற்கெனவே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் மாஸ்டர் படத்திற்கு கிடைத்த சம்பளம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
‘பிகில்’ படத்திற்காகப் பெற்ற சம்பளம் குறித்தும் சொத்து மதிப்புகள் குறித்தும் பெப்ரவரி 5ஆம் திகதி நடிகர் விஜய் வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்தும் சொத்து முதலீடு குறித்தும் நடிகர் விஜய் மற்றும் மனைவி சங்கீதா இருவரிடமும் வருமான வரி அதிகாரிகள், 24 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
அந்த சமயத்தில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ்., உரிமையாளர்கள் அலுவலகம், வீடு மற்றும் திரையரங்கிலும் அன்புச்செழியன் வீடு, அலுவலகத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மூவருக்கும் தனித்தனியாகச் மனு அனுப்பி அதிகாரிகள் விசாரித்தனர்.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் “மாஸ்டர்” படத்தின் இணை தயாரிப்பாளரான லலித்குமார் வீட்டில், வருமான வரி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM