மட்டக்களப்பில் பெப்ரவரி 29ஆந் திகதி தொடக்கம்; மார்ச்சு 06ஆந் திகதி வரை ஒரு வாரத்தில் 100 பேர் டெங்கு தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவிற்கு பொறுப்பான வைத்தியர் வி. குணராஜசேகரம் தெரிவித்துள்ளார்.
அவரது தகவலை மேற்கோள்காட்டி இன்று வியாழக்கிழமை 12.03.2020 மாவட்ட செயலக தகவல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் குறிப்பிடப்படப்பட்ட ஒரு வார காலத்தில் 100 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகிய நிலையில் சிகிச்சை பெற்று வீடு சென்றுள்ளனர்;.
அதன்படி, மட்;டக்களப்பு மண்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் இதுவரை 10 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், குறிப்பிடப்படும் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுகளான ஆரையம்பதி 23, களுவாஞ்சிகுடி 15 வாழைச்சேனை 06 செங்கலடி 03 காத்தான்குடி 05, ஏறாவூர் 09, வெல்லாவெளி 02;, பட்டிப்பளை 02;, ஓட்டமாவடி 09, கோறளைப்பற்று மத்தி 11;, கிரான் 02 வாகரை 03 பேர் என டெங்கு நோய்க்கு உள்ளானோரின் எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
வவுணதீவு சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் டெங்கு நோயாளர்கள் எவரும் இனங்காணப்படவில்லை. மேலும் கடந்த இரு வாரங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயினால் எந்த ஒரு மரணங்களும் பதிவாகவில்லையென வைத்தியர் குணராஜசேகரம் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM