வவுனியா பழைய பேரூந்து தரிப்பிடம் அமைந்துள்ள நகரசபை கட்டிடத் தொகுதியின் ஒரு பகுதி (11.03) இடிந்து வீழ்ந்ததில் பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா நகரசபையின் கட்டிடத்தொகுதியில் பல கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள நிலையில் கடை ஒன்றில் பொருட்களை கொள்வனவு செய்துகொண்டிருந்த பெண்மீது கட்டிடத்தின் மேல்தளம் திடீரென உடைந்து வீழ்ந்துள்ளது.
இதனையடுத்து சம்பவம் தொடர்பாக கடை உரிமையாளர் பொலிஸ் மற்றும் நகரசபைக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் மற்றும் நகரசபை உத்தியோகத்தர்கள் காயமடைந்த பெண்னை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.
இடிந்து வீழ்ந்த கட்டிடத்தொகுதியின் கடை உரிமையாளர் கருத்து தெரிவிக்கையில், வவுனியா நகரசபைக்கு குறித்த கட்டிடம் விரிசல் ஏற்பட்டுள்ளது தொடர்பாக பல தடவைகள் கடிதம் மூலம் அறிவித்தல் வழங்கப்பட்டும் நகரசபை நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM