மட்டக்களப்பு, வாழழைச்சேனை பகுதியில் அமைந்துள்ள கோவில் திருவிழா ஒன்றுக்குச் சென்று வீட்டுக்கு வந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் மீது தீப் பிடித்துக் கொண்டதினால் அவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணியளவில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறக்கொட்டான்சேனை தேவாபுரம் பகுதியைச் சேர்ந்த பிள்ளை ஒன்றின் தாயான சீனித்தம்பி சுவாஜினி(32 வயது) என்றழைக்கப்படும் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவரின் கணவன் வெளிநாடு சென்றுள்ள நிலையில் தனது 13 வயது மகளுடன் வாழைச்சேனையில் அமைந்துள்ள இந்து ஆலயத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற வருடாந்த கோவில் திருவிழா ஒன்றுக்குச் சென்றுள்ளார்.
திருவிழா முடிவடைந்து நேற்று மாலை 4 மணியளவில் வீட்டுக்கு வந்து தேனீர் தயார் செய்வதற்காக கேஸ் சிலிண்டர் அடுப்பை தயார் நிலை படுத்தும்போது கேஸ் சிலிண்டரில் ஏற்பட்டிருந்த கசிவுத் தன்மை காரணமாக இவர் மீது தீப் பிடித்துள்ளது.
உடனடியாக தீக் காயங்களுக்குள்ளான இவரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை பெற்ற வந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணியளவில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் இவரின் மரணம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொள்ள பிரேத பரிசோதணையை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ஜெயக்கொடி மேற்கொண்டு மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்தார்.
இம் மரணம் தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஷீர் மேற்கொண்டு தீயினால் ஏற்பட்ட விபத்து மரணம் எனத் தீர்ப்பளித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM