கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 115,000 ஐயும் கடந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது, 4,200 க்கும் அதிகமாகவுள்ளது.
இந் நிலையில் உலக நாடுகள் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு சவால்களை எதிர்கொண்ட வண்ணமே இன்னும் உள்ளன.
கடந்த வாரங்களாக சீனாவில் கொரோனவினால் ஆயிரக் கணக்கானோர் தினசர பாதிப்படைந்த நிலையில் நேற்றுமுன்தினம் 19 பேரும், நேற்றைய தினம் 24 பேரும் கொரோனாவினால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக சீன தேசிய சுகாதார ஆணையகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இவர்களில் பெரும்பாலானோர் வெளிநாடுகளிலிருந்து சீனாவுக்கு திரும்புபவர்களே ஆவர்.
எனினும் சீனாவுக்கு அண்மையிலுள்ள நாடுகளான ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் நேற்றைய தினம் மாத்திரம் அதிகளவானோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அதன்படி ஜப்பானில் நேற்று மாத்திரம் 54 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக ஜப்பான் சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
அதேபோன்று தென்கொரிய அதிகாரிகள் நேற்றைய தினம் 242 புதிய கொரோனா நோயாளர்களை அடையாளம் கண்டுள்ளதாக உறுதிப்படுத்தினர். இதன் மூலம் அங்கு மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 7,755 ஆக உயர்வடைந்துள்ளது.
கொரோனா தொற்றினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றாக காணப்படும் நாடு தென் கொரியா ஆகும். எனினும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக அந் நாட்டு அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு சர்வதேச நாடுகள் பாராட்டியுள்ளன.
குறிப்பாக தென் கொரியா இதுவரை சுமார் 200,000 பேரை கொரோனா தொற்று தொடர்பான பரிசோதனைக்குட்படுத்தியுள்ளது.
அது மாத்திரமல்லாது மேற்கத்தைய நாடுகளும் கொரோனவை கட்டுப்படுத்த பல்வேறு போராட்டங்களை தொடர்ந்த வண்ணமே உள்ளன.
அமெரிக்காவில் கொரோனாவினால் தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல மாநிலங்களில் அவசரகால நிலைகளும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இத்தாலி அதன் சுகாதார அமைப்பு சமாளிக்க போராடுவதால் அதன் பல்வேறு பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலேயே உள்ளது. அதே நேரத்தில் ஜேர்மன் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளைச் சேர்ந்தோரும் தமது அன்றாட வாழக்கைய முன்னெடுக்க பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM