சாதாரண தண்ணீர் தாங்கி வாகனம் ஒன்றில் தொழில்நுட்ப ரீதியான மாற்றங்களை எற்படுத்தி தீயணைப்பு வாகனமாக உருமாற்றம் செய்து வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையால் பரீட்சித்து பார்க்கப்பட்டது.
இது தொடர்பாக ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த தெற்கு தமிழ் பிரதேசசபையின் தவிசாளர் து.நடராஜசிங்கம், எமது பிரதேசபைக்கு தீயணைப்பு வாகனம் ஒன்றின் அவசியத்தை கருத்தில் கொண்டு உள்ளுராட்சி ஆளுகை நிறுவனத்துடன் தொடர்புகொண்டு அவர்களது 5 இலட்சம் ரூபாய் நிதிஉதவியுடன் பிரதேசசபையினரின் தொழில்நுட்ப அறிவினையும் பயன்படுத்தி குறித்த தீயணைப்பு வாகனம் உருவாக்கபட்டுள்ளது.
வடமாகாணத்திலே குறைந்தளவு நிதியினை செலவளித்து இவ்வியந்திரத்தை உருவாக்கியுள்ளோம். இதனை இன்று பரீட்சித்து பார்த்துள்ளோம். இனிவரும் காலங்களில் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி தீ விபத்துக்களை தடுப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளோம்.
குறித்த வாகனம் தீயணைப்பு வாகனத்தை ஒத்தவகையில் அதிதிறன் வாய்ந்தவாறு உருவாக்கப்பட்டுள்ளதுடன் பகல் வேளைகளில் 024-2225737என்ற தொலைபேசி இலக்கத்திற்கும் இரவு வேளைகளில் 0773634511 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும் தொடர்பு கொண்டு பொதுமக்கள் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM