(இராஜதுரை ஹஷான்)
ஐக்கிய மக்கள் சக்தி பொதுத்தேர்தலில் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளது. சின்னம் தொடர்பில் எவ்வித சட்டச் சிக்கல்களும் ஏற்படாது. தேவையான ஆவணங்களை ஆணைக்குழுவில் சமர்ப்பித்துள்ளோம். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற கோரிக்கையினை நிறைவேற்றியுள்ளோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் காரியாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஐக்கிய மக்கள் சக்தி ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக தோற்றுவிக்கப்பட்டது. அல்ல அனைத்து தரப்பினரும் ஒன்றினைந்து பொதுத்தேர்தலில் போட்டியிட வேண்டும். என்ற காரணத்தினாலேயே கூட்டணியை ஸ்தாபித்தோம். ஆனால் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட அளவு ஆதரவு கிடைக்கப் பெறவில்லை. இன்றும் அவர் தரப்பில் உள்ள ஒரு சிலர் ராஜபக்ஷர்களுக்கு ஆதரவாகவே செயற்படுகின்றார்கள்.
ஐக்கிய மக்கள் சக்தி இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் தொலை பேசி சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளது. சின்னம் தொடர்பில் எவ்வித சட்ட சிக்கல்களும் ஏற்படாது. தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளோம். ஐக்கிய மக்கள் சக்திக்கு உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களில் 95 சதவீதமானோர் ஆதரவு வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்கள்.
25 வருட காலத்திற்கும் அதிகமாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படுத்தாத காரணத்தினாலேயே ஜனாதிபதி பதவியை பெற்றுக் கொள்ளவும் அரசாங்கத்தை தக்கவைத்துக் கொள்ளவும் முடியாமல் போனது. ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்களின் கோரிக்கைகக்கு அமையவே தற்போது பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம்.
ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி தோல்வியடைந்ததை தொடர்ந்து ஐக்கிய தேசியகட்சியின் ஆதரவாளர்கள் கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும். என்ற கோரிக்கையினை மாத்திரம் முன்வைத்தார்கள் . இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் வெற்றிப் பெற வேண்டுமாயின் கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்கள். இதனையே ஐக்கியதேசிய கட்சியின் செயற்குழுவில் தொடர்ந்து வலியுறுத்தினோம். ஆனால் அவர்கள் எவ்வித விட்டுக் கொடுப்புக்களையும் செய்யாமல் தொடர்ந்து ராஜபக்ஷர்களுக்கு ஆதரவாகவே செயற்பட்டார்கள்.
இனவாதத்தை அரசியல் பிர சாரமாக்கி ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தின் பலவீனம் மூன்று மாத காலத்திற்குள் வெளிப்பட்டு விட்டது. 69 இலட்ச மக்களும் இன்று அரசாங்கத்தின் செயற்பாட்டை எதிர்க்கின்றார்கள். அனைவரது அபிப்ராயங்களுக்கும் அமைய பொதுத்தேர்தலில் எம்மால் வெற்றிப்பெறமுடியும்.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ குடும்ப ஆட்சிக்கு தற்போது கடுமையான எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றார். சஜித் பிரேமதாஸவை பிரதமராக்கி இருவரும் ஒன்றினைந்து செயற்பட முடியும். நாட்டில் தூய அரசியல் நிர்வாகத்தை ஏற்படுத்துவதே எமது பிரதான எதிர்பார்ப்பாகும். அனைத்து தரப்பினரையும் ஒன்றினைத்து பலமான அரசாங்கத்தை நிச்சயம் கட்டியெழுப்புவோம். என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM