கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இரு இலங்கையர்கள் உள்ளிட்ட 15 பேர் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இத்தாலியர்கள் மூவர், ஐக்கிய அரபு இராஜ்ஜியம், பிரிட்டன், இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா இருவர், ஜேர்மனி, தென்னாபிரிக்கா, தன்சானியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் வீதம் 15 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு இராஜ்ஜியம் உறுதிப்படுத்தியுள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் கொரோனா வைரஸ் தொற்று குறித்த தடுப்பு நடவடிக்கைகளை முறையாக செயல்படுத்துவதன் மூலம் கொரோன வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்கள் கண்டறியப்பட்டதாக ஐக்கிய அரபு அமீரக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரை கொரோனா வைரஸினால் உலகளாவிய ரீதியில் 4,018 பேர் உயிரிழந்துள்ளதுடன் 113,009 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, சீனாவில் மாத்திரம் கொரோனாவின் தாக்கத்தால் 3,136 பேர் உயிரிழந்துள்ளதுடன் 80,754 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM