(எம்.எப்.எம்.பஸீர்)
தம்மை கைதுசெய்ய கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை, செல்லுபடியற்றதாக அறிவிக்குமாறு கோரி முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட நால்வர் மேன் முறையீட்டு நீதிமன்றில் ரீட் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந் நிலையில் குறித்த ரீட் மனுவை நாளைய தினம் பரிசீலனைக்கு எடுக்க மேன் முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்தது.
அதன்படி இந்த ரீட் மனுவில் பிரதிவாதிகளாக பெர்யரிடப்பட்டுள்ள சட்ட மா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட ஆறு பேருக்கு நாளைய தினம் மன்றில் ஆஜராகுமாறும் மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்தல் விடுத்தது.
கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் திகதி மற்றும் மார்ச் 31 ஆம் திகதி இடம்பெற்ற பிணைமுறிகள் ஏலத்தின் போது நிக்ழ்ந்ததாக கூறப்படும் குற்றங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால், கோட்டை நீதிவான் நீதிமன்றில் கடந்த 4 ஆம் திகதி புதிய வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையிலேயே, சி.ஐ.டி.யின் கோரிக்கைக்கு அமைவாக 10 பேரை கைது செய்ய கடந்த 6 ஆம் திகதி உத்தர்வு பிறப்பிக்கப்ப்ட்டது.
இந்த ஏலத்தின் போது 51.98 பில்லியன் ரூபா முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்ப்ட்டுள்ள நிலையில், அது தொடர்பிலேயே ரவி கருணாநாயக்க, அர்ஜுன் அலோசியஸ் உட்பட 10 பேரைக் கைது செய்ய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதில் ஒருவர் தற்போதும் கைதாகி விளக்கமறியலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM