பிரபல ஸ்பானிஷ்-அமெரிக்க சமையற்காரரான ஜோஸ் ஆண்ட்ரேஸ் கிராண்ட் பிரின்சஸ் குரூஸ் கப்பலில் பயணிகளுக்கு சேவை செய்ய முன்வந்துள்ளார்.
அதாவது தனது தொண்டு அமைப்பான “உலக மத்திய சமையலறையை ” கிராண்ட் பிரின்சஸ் குரூஸ் பயணக் கப்பலுக்கு அருகில் முகாம் அமைத்து பயணிகளுக்கு இலவாசமாக உணவளிக்கின்றார்.
“ உலக மத்திய சமையலறை ” என்பது இயற்கை பேரழிவுகளை அடுத்து உணவு வழங்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற அரச சார்பற்ற அமைப்பாகும். பிரபல சமையற்காரர் ஜோஸ் ஆண்ட்ரேஸால் 2010 இல் நிறுவப்பட்ட இந்த அமைப்பு, ஹெயிட்டியில் ஏற்பட்ட பூகம்பத்தைத் தொடர்ந்து உணவு தயாரித்து கொடுத்தது.
கிராண்ட் பிரின்சஸ் குரூஸ் கப்பலில் 50 நாடுகளைச் சேர்ந்த 3500 பயணிகள் தங்கியுள்ளனர். இதில் முதற்கட்டமாக 46 பேருக்கு நடைபெற்ற பரிசோதனையில் 21 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் இதனை அறிவித்துள்ளார்.
தற்போது குறித்த கப்பல் ஓக்லாந்து துறைமுகத்தில் உள்ளது. சில பயணிகள் நேற்று திங்கட்கிழமை முதல் வெளியேற தொடங்கியுள்ளார்கள்.
உலக மத்திய சமையலறை அமைப்பு ஜப்பானில் உள்ள டயமண்ட் பிரின்சஸ் பயணக் கப்பலில் இருந்தவர்களுக்கு உணவளித்தது.
மேலும், அனைத்து வகையான அவசரகால சூழ்நிலைகளின் முன் வரிசையில் இருப்பது இலாப நோக்கற்ற செயற்பாடாகும். அந்தவகையில் சூறாவளி, காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த குழு உணவு வழங்கியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM