வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை மட்டக்களப்பு பல்கலைக்கழகம் மற்றும் கந்தகாடு புனர்வாழ்வு நிலைய தடுப்பு முகாமிற்கு கொண்டுவரப்படவுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு முன்னாள் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை (10) பிற்பகல் 3 மணிக்கு இடம்பெற்றது
அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புக்கள் ஒன்றினைந்து இந்த எதிர்ப்பு ஆர்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்தன. இதனையடுத்து மாலை 3 மணிக்கு மட்டக்களப்பு ஆனைப்பந்தி பிள்ளையார் ஆலயத்தின் முன்பாக நூறுக்கும் மேற்பட்ட பொதுக்கள் ஒன்றினைந்தனர்.
இதனையடுத்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் கொவி 19 கோரோனா பரிசோதனை வேண்டாம், அரசே சிகிச்சைக்காக மக்கள் நடமாட்டமற்ற பிரதேசத்தை தெரிவு செய், மட்டு வைத்தியசாலை பொது மக்களுக்கானது , தனியான தனிமைப்படுத்தும் வைத்தியசாலையை ஏற்பாடு செய், நீங்கள் எங்களை வேறுபடுத்துகின்றீர்களா, கொரோனாவை எமக்கு தினிக்க வேண்டாம், என பவ்வேறு வாசகங்கள் அடங்கிய சுலோகங்களை ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பியவாறு
குறித்த போராட்டம் ஊர்வலமாக வைத்தியசாலை வீதி வழியாக வைத்தியசாலைக்கு முன்பு வந்தடைந்து வைத்தியசாலைக்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ரிதிதென்னை பிரதேசத்தில் இந்த தடுப்பு முகாமிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதேவேளை ஹர்த்தால் மட்டு காந்தி பூங்காவிற்கு முன் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
ஹர்த்தால் இடம்பெறாதாத போதும் காந்தி பூங்காவிற்கு முன்னால். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா. சிறிநேசன், சீ. யோகேஸ்வரன், ஜெயானந்தமூர்த்தி மட்டு மாநகர முதல்வர் உட்பட அரசியல் வாதிகள் வந்தடைந்தபோதும் ஆர்ப்பாடத்திற்கு பொது மக்கள் வராததையடுத்து ஆர்ப்பாட்டம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM