நீர்கொழும்பில் ஹோட்டல் ஊழியர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் ; ஒருவர் கைது! 

Published By: Vishnu

10 Mar, 2020 | 02:01 PM
image

(எம்.மனோசித்ரா)

நீர்கொழும்பு - பெரியமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டலின் ஊழியர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு - பெரியமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள குறித்த ஹோட்டலில் நேற்று இரவு 9.30 மணியளவில் 6 பேர் அத்துமீறி நுழைந்து மதுபானம் அருந்த முயற்சித்துள்ளனர்.

இதன் போது ஹோட்டல் உரிமையாளர் மது அருந்த வேண்டாம் என்று எச்சரித்த போது குறித்த 6 பேரும் அவரையும் ஹோட்டல் ஊழியர்களையும் கூரிய ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கி தப்பிச் சென்றுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான ஹோட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட நால்வர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதன் போது ஊழியர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 36 வயதுடைய கனேவெல்பொல , கெகிராவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

தப்பிச் சென்றவர்களை கைது செய்வதற்காக நீர்கொழும்பு பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளின் மூலம் ஒரு சந்தேகநபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 18 வயதுடைய நீர்கொழும்பு , பெரியமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். 

நீர்கொழும்பு பொலிஸார் ஏனைய சந்தேகநபர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44