(எம்.மனோசித்ரா)
நீர்கொழும்பு - பெரியமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டலின் ஊழியர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு - பெரியமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள குறித்த ஹோட்டலில் நேற்று இரவு 9.30 மணியளவில் 6 பேர் அத்துமீறி நுழைந்து மதுபானம் அருந்த முயற்சித்துள்ளனர்.
இதன் போது ஹோட்டல் உரிமையாளர் மது அருந்த வேண்டாம் என்று எச்சரித்த போது குறித்த 6 பேரும் அவரையும் ஹோட்டல் ஊழியர்களையும் கூரிய ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கி தப்பிச் சென்றுள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான ஹோட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட நால்வர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் போது ஊழியர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 36 வயதுடைய கனேவெல்பொல , கெகிராவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
தப்பிச் சென்றவர்களை கைது செய்வதற்காக நீர்கொழும்பு பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளின் மூலம் ஒரு சந்தேகநபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 18 வயதுடைய நீர்கொழும்பு , பெரியமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
நீர்கொழும்பு பொலிஸார் ஏனைய சந்தேகநபர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM