(ஆர்.யசி)
ஐக்கிய தேசிய கட்சியாக யானை சின்னத்தில் பயணிப்பதே இறுதித் தீர்மானமென ரணில் அணியினரும் தொலைபேசி சின்னத்தில் ஐக்கிய மக்கள் சக்தியாக 22 மாவட்டங்களில் போட்டியிடுவோம் என சஜித் தரப்பினரும் ஏட்டிக்கு போட்டியான நிலைப்பாட்டை கொண்டுள்ள நிலையில் இருதரப்பு ஓரணியாக களமிறங்குவது என்ற விடயத்தில் பெரும்பின்னடைவு நிலை ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய முன்னணியினர் இம்முறை பொதுத் தேர்தலில் எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பதில் பாரிய முரண்பாடான நிலை ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியாக யானை சின்னத்தில் தாம் இம்முறை போட்டியிடவுள்ளதாகவும் சஜித் பிரேமதாச அணியினர் தம்முடன் இணைந்துகொள்ள வேண்டும் எனவும் ரணில் தரப்பினர் தெரிவித்துள்ள நிலையில், கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தமது நிலைப்பாட்டை தேர்தல்கள் ஆணைகுழுவிற்கு அறிவித்திருந்தார். அத்துடன் 22 தேர்தல் மாவட்டங்களிலும் யானை சின்னத்திலேயே போட்டியிடுவோம் எனவும் அவர் அறிவித்துள்ளார். அதேபோல் சஜித் அணியின் உறுப்பினர்கள் தாம் தொலைபேசி சின்னத்தில் 22 மாவட்டங்களிலும் போட்டியிடுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் இரு தரப்பினரும் தனித்தனியே அவர்களின் சின்னங்களை பிரசித்தி படுத்தி பிரசாரங்களை முன்னெடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். ரணில் தரப்பினரான நவீன் திசாநாயக உள்ளிட்ட சிலர் தமது தேர்தல் மாவட்டங்களில் ஐக்கிய தேசிய கட்சி யானை சின்னத்தில் களமிறங்கும் என பிரச்சாரங்களை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளனர்.
நுவரெலிய தொகுதி அமைப்பாளர்களை சந்தித்த நவீன் திசாநாயக தாம் யானை சின்னத்தில் பயணிப்பதாக தீர்மானம் ஒன்றினையும் நிறைவேற்றியுள்ளார். இதன்போது அவர் கூறுகையில் ' கட்சி இரண்டாக பிளவுபடும் என தெரிகின்றது. இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியும் யானை சின்னமுமே பழமையானதாகும். அதனை நிராகரித்து பயணிக்க முடியாது. எனவே ஐக்கிய தேசிய கட்சி யானை சின்னத்தில் போட்டியிடும். எமது தொகுதி அமைப்பாளர்கள் அதற்கான அங்கீகாரத்தை கொடுத்துள்ளனர் என கூறியுள்ளார்.
அதேபோல் சஜித் தரப்பு உறுப்பினரான ரஞ்சித் மத்துமபண்டார தனது தேர்தல் தொகுதியான மொனராகல மாவட்ட தொகுதி அமைப்பாளர்களை சந்தித்த வேளையில் தாம் தொலைபேசி சின்னத்தில் பயணிக்கவுள்ளதாக தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றியுள்ளார். இதன்போது அவர் கருத்துத் தெரிவிக்கையில்
ஐக்கிய தேசிய கட்சி இணக்கப்பாடுகளுக்கு வருவதாக இல்லாத விடத்து எம்மால் தேர்தலில் பலவீனமடைய முடியாது. எமக்கு தொலைபேசி சின்னம் உள்ளது அதனை பிரதானப்படுதி எமது பிரசாரங்களை முன்னெடுக்கவுள்ளோம்" என குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM