நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகள்,நீரேந்துப் பகுதிகள், பைனஸ் வன பகுதிகள் மற்றும் மானா புற்காடுகள் உள்ள பகுதிகள் பாரிய அளவில் தீக்கு இறையாகி உள்ளதாக சுற்று சூழல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
மேலும், தற்போது நிலவும் கடும் வெப்பமான வானிலை காரணமாக மலையக பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்டுவதால் அவ்வனப்பகுதியில் உள்ள காட்டு கோழி, குருவிகள், மான்கள், சிறுத்தைகள்,காட்டு பன்றிகள் மற்றும் தேசிய பூச்சி வகைகள் அழிவடையும் அபாயம் தோன்றுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
அத்துடன் இவ்வாறு மலைகளுக்கு தீ வைப்பதால் எதிர்காலத்தில் நீர் ஊற்றுகள் வற்றுதல் மற்றும் அதிக மழைவீழ்ச்சி பெய்யும் போது மலைகள் தாழ் இறங்குதல் போன்ற பாரிய விபத்துகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
மலையகத்தில் உள்ள தோட்ட பகுதிகளான டயகம,அக்கரப்பத்தனை,லிந்துலை, நானுஓயா, தலவாக்கலை, கொத்மலை, திம்புள்ள, ஹட்டன், வட்டவளை, டிக்கோயா,நோர்வுட், பொகவந்தலாவை, நல்லத்தண்ணி,சாமிமலை, மஸ்கெலியா,நோட்டன் மற்றும் கினிகத்தேனை ஆகிய பகுதிகளில் உள்ள பொலிஸ் பிரிவுகளில் காணப்படும் வனப்பகுதிகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது என அவர்கள் கூறுகின்றனர்.
இவ்வாறு வனபகுதிக்கு தீ வைப்பதால் ஏற்படும் அபாயத்தை பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அப்பகுதிகளில் உள்ள பொலிஸார், இராணுவத்தினர், அதிரடி படையினர் மற்றும் சமய குருமார்கள் தெளிவுபடுத்த வேண்டும் என வன பாதுகாப்பு சுற்று சூழல் பாதுகாப்பு அதிகார சபை வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM