தென்கொரியாவில் இருந்து இலஙகை வந்த சிலர் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை தென்கொரியாவில் இருந்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த 166 பேரே இவ்வாறு மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு இலங்கைக்கு வந்த 166 பேரில் 164 பேர் இலங்கையர்கள் எனவும் 2 பேர் கொரியர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், இலங்கைக்கு வெளிநாடுகளில் இருந்துவருவோரை கொரோனா தொற்றுத் தொர்பில் பரிசோதனை மேற்கொள்வதற்கு தனிமைப்படுத்தப்பட்ட மையமாக மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தை இலங்கை அரசாங்கம் தெரிவுசெய்திருந்தது.
இந்நிலையில் குறித்த தனிமைப்படுத்தப்பட்ட மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வருவோரை அழைத்துச்சென்று அங்கு 14 நாட்கள் தங்கவைத்து கொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே அவர்கள் நாட்டுக்குள் வர அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இத்தாலி, தென்கொரியா மற்றும் ஈரானில் இருந்து வரும் பயணிகளை மட்டக்களப்பிலுள்ள ஹிஸ்புல்லாஹ் பல்கலைக்கழகத்திலும் மட்டக்களப்பு அரச வைத்தியசாலையிலும் தனிமைப்படுத்தி வைப்பதற்கான ஏற்பாடுகள் நேற்றுமுன்தினம் 8 ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM