சோமாலியாவில் இடம்பெற்ற வான் வழித் தாக்குதலில் அல்-ஷபாப் என்ற தீவிரவாத குழுவின் மூத்த தளபதிகளுள் ஒருவரான பஷீர் மொஹமட் கோர்காப் என்பவர் உயிரிழந்துள்ளதாக பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு பஷீர் மொஹமட் கோர்காப் குறித்த தகவல்களை வெளிப்படுத்தியமைக்காக அமெரிக்கா 5 மில்லியன் டொலர்களை வழங்கியது.
சோமாலியாவில் தீவிரவாதிகளை குறி வைத்து அமெரிக்க அடிக்கடி வான்வழித் தாக்குதலை நடத்துகின்றது. இந் நிலையில் இந்த தாக்குதல் குறித்து அமெரிக்கா இதுவரை அறிக்கை எதையும் வெளியிடவில்லை.
எனினும் கோர்காபின் குடும்பத்தினர் அவரது மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளனர்.
சோமாலியமற்றும் அமெரிக்க இராணுவத்தின் கூட்டு நடவடிக்கையைத் தொடர்ந்து பெப்ரவரி 22 ஆம் திகதி தெற்கு சோமாலிய நகரமான சாகோவில் கோர்காப் கொல்லப்பட்டதாக சோமாலிய அரசு வானொலி சேவைகள் சுட்டிக்காட்டியிருந்தது.
எனினும் சர்வதேச ஊடகங்கள் அவரின் உயிரிழப்பு தொடர்பில் தற்போதே செய்திகளை வெளியிட்டுள்ளதுடன், அந்த தாமதத்திற்கான காரணத்தையும் வெளியிடவில்லை.
ஏனைய தலைவர்களுடனான கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து கோர்காப் அல்-ஷபாபிலிருந்து பிரிந்துவிட்டதாக கடந்த மாதம் சோமாலிய செய்தி ஊடகங்களில் உறுதிப்படுத்தப்படாத தகவல்களையும் வெளியிட்டிருந்தன.
அல்-ஷபாப் அல்-கொய்தாவுடன் தொடர்புபட்டுள்ளதுடன் தெற்கு மற்றும் மத்திய சோமாலியாவின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்துகிறது.
இது சோமாலியாவுக்கு அண்டை நாடான கென்யாவிலும் குண்டுவெடிப்பு சம்பவங்களை நடத்தியுள்ளது, மேலும் குறித்த பகுதியில் மிகவும் ஆபத்தான குழுவாகவும் இது கருதப்படுகிறது.
கடந்த மாதம், அல்-ஷபாப் கென்யா மற்றும் அமெரிக்கப் படைகள் பயன்படுத்திய கென்யாவில் ஒரு தளத்தை தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் மூவர் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்கத்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM