(இராஜதுரை ஹஷான்)
தனது சகோதரனான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணக்கமாக செயற்பட முடியாது. என்பதை வெளிப்படையாக குறிப்பிட முடியாத காரணத்தினாலேயே ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை கடுமையாக எதிர்க்கின்றார்.
நாட்டுக்கு தேவையான அரசியலமைப்பினை உருவாக்கும் நோக்கம் ராஜபக்ஷர்களுக்கு கிடையாது. நீதிமன்ற கட்டமைப்பின் ஊடாக தங்களின் சுய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவே முயற்சிக்கின்றார்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
பொது சிவில் நிர்வாக சேவையில் இன்று அதிகளவில் இராணுவத்தினர் இணைத்துக் கொள்ளப்படுவதன் பின்னணி என்ன. இராணுவ ஆட்சிக்கான ஆரம்ப அடித்தளமே தற்போது இடப்படுகின்றது. இதற்கு தடையாக சுயாதீனப்படுத்தப்பட்ட நீதிமன்றம் உள்ளதால் 19 ஆவது திருத்தத்தை ஜனாதிபதி எதிர்க்கின்றார். இவர்களின் நோக்கத்திற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM